மும்பையில் 2 பங்களாவை திருமணத்துக்கு முன்பே வரலட்சுமி சரத்குமாருக்கு அவருடைய வருங்கால கணவர் பரிசாக கொடுத்துள்ளதாக ஒரு செய்தி வெளியானது. இந்த நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் பற்றிய அப்டேட் ஒன்று வெளிவந்திருக்கிறது.
தமிழில் சிம்பு இணையாக போடா போடி படத்தில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் மகள் என்ற போதிலும் முதல் படத்திலேயே அவர் அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் பல படங்களில் வெவ்வேறான கதாபாத்திரங்களில் நடித்தார். இவருடைய நடிப்பு பாலாவின் தாரை தப்பட்டை படத்தில் பெரிதும் பேசப்பட்டது. இந்த படத்துக்காக இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்பின் தொடர்ந்து அவர் தன்னுடைய திரை பயணத்தில் தைரியமான சில முடிவுகளை எடுத்தார். அந்த வகையில் விஜய்யின் சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் வில்லி வேடத்தில் நடித்து ஆச்சரியப்பட வைத்தார். தெலுங்கிலும் சில படங்களில் வில்லியாக நடித்து மிரட்டியுள்ளார்.
ஆரம்ப காலங்களில் விஷாலுடன் கிசுகிசுக்கப்பட்ட வரலட்சுமி பின் விஷாலுக்கு எதிராக பேசி கொண்டிருந்தார். சரத்குமாருக்கும் விஷாலுக்கும் நடிகர் சங்க விவகாரத்தில் மோதல் உச்சத்தில் இருந்தது. அப்போது இவர் விஷாலுடன் நட்பு பாராட்டி வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை விஷாலுக்கும் இவருக்கும் விரிசல் உண்டானது.
இதைத்தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலை சச்தேவ் என்பவருடன் இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் நடத்தப்பட்டது. அதன்பின் இந்த நிக்கோலை சச்தேவ் ஏற்கனவே கல்யாணம் ஆனவர் என்பதும் இவருடைய முதல் மனைவி கவிதா Mrs Gladrags 2010 என்ற பட்டத்தை ஜெயித்தவர் என்பதும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி இவருக்கு 15 வயதில் ஒரு மகளும் உள்ளார். அவர் மகள் பளு தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளார் என்ற தகவலும் கசிந்தது. இதனை வைத்து பலரும் வரலட்சுமி சரத்குமாரின் முடிவை விமர்சித்து வந்தனர். ஆனால் இதில் ஏதும் தவறில்லை என வரலட்சுமி வெளிப்படையாகவே பேட்டிக் கொடுத்தார்.
மேலும் வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணத்துக்கு முன்னதாகவே அவருடைய வருங்கால கணவர் மும்பையில் 2 பங்களாவை பரிசாக கொடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் பற்றி அப்டேட் ஒன்று வெளிவந்திருக்கிறது.
அதன்படி தாய்லாந்தில் வரலட்சுமி சரத்குமார் திருமணம் ஜூலை 2ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் வெளிநாட்டில் திருமணம் செய்து கொள்வதை ஒரு ஃபேஷனாக கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது வரலட்சுமி சரத்குமாரும் சேர்ந்துள்ளார். தாய்லாந்தை லொகேஷனாக தேர்வு செய்துள்ளதால் இவர்களது திருமணம் பீச் வெட்டிங்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.