இந்து மதத்தின் மீது தீவிர பக்தி உடையவர்கள் காலையில் எழுந்தவுடன் ஒரு கடவுள் மந்திரத்தை சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். காயத்ரி மந்திரமோ அல்லது ஒரு எளிய ‘ஓம் நம சிவாய’ என்னும் மந்திரமோ அவர்களின் வாயிலிருந்தும் மனதிலிருந்தும் வெளிவரும் முதல் சொற்களாக இருக்கும்.
reason for chanting mantra 108 time
மந்திரங்கள் மக்களின் வாழ்க்கையிலும் பல ஆன்மீக மற்றும் மத வழிபாடுகளிலும் முக்கிய பங்கினை பிடித்துள்ளன. பல்வேறு வகையான பாராயணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள செய்திகள் மற்றும் கதை போன்றவற்றில், மக்கள் கேட்கும் பொதுவான ஒரு செயல் ஒரு மந்திரத்தை 108 தடவை ஜபிக்க வேண்டும் என்பதாகும்.
ஒரு மந்திரத்தை 108 முறை ஜபிப்பதால் பல பலன்கள் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது, அதற்கான காரணம் என்ன மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எண் கணிதத்தில் 108
எண் கணிதம் என்பது எண்களை குறித்த ஆய்வு ஆகும், இது மக்களின் குணங்கள், பண்புக்கூறுகள் அவர்களின் இயல்பு மற்றும் பலவற்றை தீர்மானிக்க பயன்படுகிறது. மேலும் எண் கணிதத்தில் 108 என்ற எண்ணை (‘1+0+8=9’) ஒவ்வொன்றாக பிரித்து அதை கூட்டி அந்த கூட்டுத்தொகை 9 என கணக்கிடப்படுகிறது. எண் 9 மிகவும் அதிர்ஷ்டமான, சக்தியுள்ள மற்றும் மங்களகரமான எண்ணாக கருதப்படுகிறது.
9 மற்றும் 12 டாலும் வகுபடும், 108 சக்திகளின் ஒற்றுமையைக் குறிக்கிறது, 1 உச்சநிலையைக் குறிக்கிறது ஏகா, 0 ஒன்றுமில்லாதது அல்லது வெறுமையை குறிக்கிறது மற்றும் 8 நேர்மறையினை குறிக்கிறது. பின்னர், எல்லாவற்றின் கூட்டுத்தொகை, 9, முடிவிலி மற்றும் எல்லாவற்றையும் உள்ளடக்கியது. இவ்வாறு, ஒரு மந்திரத்தை 108தடவை உச்சரிப்பது தனி மனிதனை ஏகா, வெறுமை மற்றும் நேர்மறையின் ஆற்றலுடன் சீரமைக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆற்றல்களை ஒருங்கிணைக்கிறது
யோக மரபில், மனித உடல் பிரபஞ்சத்தின் மிகச் சின்ன பகுதியாகவே பார்க்கப்படுகிறது. இந்த உடல், நிலைத்திருக்க, பலவிதமான சக்தி மையங்கள் அல்லது ‘சக்கரங்கள்’இருக்கின்றன. 108 ஆற்றல் கோடுகள் ஒன்று சேர்ந்து இதய சக்கரத்தை உருவாக்குகின்றன என்று நம்பப்படுகிறது, இது ஒரு மனிதனின் எல்லா உயிர்களுக்கும் மையமாகும்.
எனவே ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது இந்த ஆற்றல் மையங்கள் செயல்படுவதற்கும், சக்கரங்களை சுத்தப்படுத்துவதற்கும், உடல் முழுவதும் ‘பிராணன்’ சீராக செல்வதற்கும் உதவுவதாகவும் கருதப்படுகிறது. இது மனதையும், உடலையும், ஆன்மாவையும் அமைதிப்படுத்துகிறது மற்றும் உள் அமைதியைப் பராமரிக்க பயன்படுகிறது.
108 ஏன் முக்கிய எண்ணாக உள்ளது?
108 எண் மற்றும் மந்திரத்தின் முக்கியத்துவம் பல விதமான காரணங்களைக் கொண்டுள்ளது. 108 என்ற எண் பண்டைய நூல்கள், மத நூல்கள் மற்றும் கலாச்சார நடைமுறைகளில் பல முறை காணப்படுகிறது மற்றும் உண்மையில், இந்து மதத்தில், 108 உபநிடதங்கள் இருக்கின்றன. மேலும், இந்துக் கடவுள்களுக்கு பல்வேறு பெயர்கள் இருக்கின்றன, அவற்றின் எண்ணிக்கையும் 108 ஆகும். உதாரணமாக, சிவபெருமானுக்கு 108 வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன, அதேபோல கிருஷ்ணருக்கும் 108 பெயர்கள் இருக்கின்றன. அறிவியல் ரீதியாகவும், சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தை விட 108 முதல் 109 மடங்கு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
கவனம் மற்றும் ஆற்றல் அதிகரிப்பு
நீங்கள் ஒரு செயலில் கவனம் செலுத்த விரும்பினால் அல்லது எதையாவது மனப்பாடம் செய்ய விரும்பினால், அதை முடிந்தவரை பல தடவை திரும்ப திரும்ப சொல்ல வேண்டும் என்பது சிறுவயது முதலே நமக்கு கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்வது செறிவு மற்றும் தியானத்திற்கான ஒரு சக்தி நிறைந்த கருவியாகும்.
ஒரு மந்திரத்தை 108 முறை உச்சரிக்க நினைவாற்றல் மற்றும் கவனம் தேவைப்படுகிறது, இது அமைதி இல்லாத மனதை அமைதிப்படுத்தவும், ஒருவரின் உள் அமைதியை பராமரிக்கவும் பயன்படுகிறது. ஒரு பக்தன் மந்திரத்தை மீண்டும் மீண்டும் சொல்லும்போது, அவருடைய மனதில் இருந்த குழப்பங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து, அமைதி உணர்வு உண்டாகிறது.
சமஸ்கிருந்த எழுத்துக்கள்
சமஸ்கிருத எழுத்துக்களில் 54 எழுத்துக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஆண்பால் மற்றும் பெண்பால் இருக்கிறது, சிவன் ஆண்பால், மற்றும் சக்தி பெண்பால். எனவே 54 X 2=108. மேலும் மனிதர்களின் ஆத்மா தனது பயணத்தில் 108 நிலைகளைக் கடந்து போகிறது. அதேபோல 108 உபநிடதங்கள் இருக்கின்றன, எனவே மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது நன்மை கொடுக்கும்.