முன்னால் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு உடல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் பெற்று நலமுடன் கட்சி பணியாற்றிட வேண்டும் என்று செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பம்மல் வடக்கு பகுதி காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள அருள்மிகு ஆலவட்டம்மன் திருக்கோயிலில் அம்மனுக்கு பால் அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ் .செந்தில்குமார் மற்றும் பல்லாவரம் தொகுதி பொறுப்பாளர் எம். தீனதயாளன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.பின்பு பொதுமக்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்.
பின்னர் அனகாபுத்தூர் சர்வீஸ் சாலையில் உள்ள சீனிவாசபுரம் தென்றல் நகர் பகுதியில் கட்சியின் கொடியை மாவட்ட தலைவர் ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியினை பம்மல் வடக்கு பகுதி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.எஸ் அப்துல் காதர் ஏற்பாடு செய்தார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மோகன் ,வேலாயுதம் ,கல்யாணராமன், அருண்குமார், சசிகுமார் ,மோசஸ், ஸ்ரீதர், விஜயவேலன், சக்திவேல் ராமமூர்த்தி, நாதன், ராஜேஷ், பெருமாள், சரஸ்வதி மணிவண்ணன், ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்