பாடகி சுசித்ரா கொடுத்து வரும் பேட்டியால் கோலிவுட் தொடர் பரபரப்பில் இருந்து வருகிறது. இந்த பேட்டியில் அவர் பெரியளவில் அவருடைய முதல் கணவர் கார்த்திக்கை சாடி இருப்பதால் அவருடைய 2 வது மனைவி எப்படி ரியாக்ட் செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்திருக்கிறார்.
Karthick 2nd Wife Reply For Suchi
தமிழ் சினிமாவில் பாடகி சுசித்ரா சில பாடல்களை பாடி நல்ல வரவேற்பை பெற்றவர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய டிவிட்டர் கணக்கிலிருந்து நடிகைகளின் அந்தரங்க போட்டோக்களும் வீடியோக்களும் சரமாரியாக வெளியானது. இதை ரசிகர்கள் சுச்சி லீக்ஸ் என்று கலாய்த்தனர்.
சுசித்ராவின் முதல் கணவரான நடிகர் கார்த்திக் குமார் அவருக்கு மனநல பிரச்சினை ஏற்பட்டு உள்ளதாக கூறினார். ஆனால் அதற்கு நேர் மாறாக சுசித்ரா தன்னுடைய கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் குறிப்பிட்டார். பிறகு இருவரும் விவாகாரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இதில் நடிகர் கார்த்திக் குமார் அவரைவிட 16 வயது இளையவரான நடிகை அம்ருதா ஸ்ரீநினிவாசனை திருமணம் செய்துக்கொண்டார். தொடர்ந்து தற்போது பாடகி சுசித்ரா பேட்டிகளின் வாயிலாக மீண்டும் பரபரப்பை கிளப்பி கொண்டு இருக்கிறார். தன்னுடைய முதல் கணவர் கார்த்திக் ஒரு ஹோமோசெக்ஷுவல் எனக் குறிப்பிட்டார் அவர். தன்னுடைய முதல் கணவர் கார்த்திக் நடிகர் தனுஷுடன் ரூமில் என்ன செய்தார் தெரியுமா? திரிஷா அப்படி, கமல் வீட்டு பார்ட்டியில் என்ன நடக்கும் தெரியுமா என சில விஷயங்களை அப்பட்டமாக போட்டு உடைத்தார்.
இது கோலிவுட் பகுதியில் பெரிய அளவில் வைரலானது. சுசித்ராவின் இந்த கருத்துக்கு கார்த்திக் குமார் ஹோமோ செக்ஸுவல் ஆக இருந்தால் அதை பெருமையாக கூறிக்கொள்வேன் என வீடியோ வெளியிட்டு இருந்தார். இது மட்டுமில்லாமல் சுசித்ரா தன்னுடைய பேட்டியில் கார்த்திக் அவருடைய 2 வது மனைவி அமிர்தாவையும் ஏமாற்றி திருமணம் செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் இதற்கு அமிர்தா எப்படி பதில் அளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் இன்ஸ்டாவில் ஒரு போஸ்ட் போட்டு உள்ளார். அதில், விவாதம் செய்ய வாழ்க்கை ரொம்பவே சின்னது. அதற்கு பதில் மயிரா போச்சுன்னு சொல்லிட்டு போயிகிட்டே இருக்கணும் என தன்னுடைய கணவர் கார்த்திகை டேக் செய்திருக்கிறார். இவர்கள் இருவரை தவிர சுசித்ரா குறிப்பிட்ட மற்ற எந்த பிரபலங்களும் இதுவரை வாய் பேசாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய காலை பழக்கங்கள்?