Welcome to V Tamil News ..... VTamilNews.com என்பது பொதுமக்களுக்கு உள்ளூர் முதல் உலக செய்திகள் மற்றும் விளையாட்டு, வர்த்தகம் குறித்த தகவல்கள் வழங்கும் இணையதளம் ஆகும்.
spot_img

T20 World Cup: எங்களால் எந்த டீமையும் வீழ்த்த முடியும் – ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான்

Published :

2024 ஆம் வருடம் டி20 உலக கோப்பை போட்டியை எப்போதும் மறக்க முடியாது. அணியில் உள்ள எல்லா வீரர்களும் நன்றாக விளையாடினார்கள். எங்களை நினைத்து பெருமை அடைகிறேன். தற்போது எங்களால் எந்த டீமையும் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. நாங்கள் எங்களை மேலும் வலுவாக கட்டமைத்துக்கொண்டு திரும்பவும் அதிக பலத்துடன் வருவோம், எங்களுக்கு ஆதவளித்த எல்லோரும் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் நன்றி சொல்லியுள்ளார்

Afghanistan captain Rashid Khan Talks

Afghanistan captain Rashid Khan
Afghanistan captain Rashid Khan

இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஒன்பது விக்கெட்டுகளில் வீழ்த்தி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் சென்றது. இந்த தோல்வியின் மூலம் டி20 போட்டியிலிருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியுள்ளது. இது பற்றி ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் தெரிவித்துள்ளது. அதாவது, இந்த போட்டியில் முழுவதும் நாங்கள் அனுபவித்து விளையாடியுள்ளோம். நிறைய கடினமான சூழல்களை எங்கள் வீரர்கள் சிறப்பாக கையாண்டு விளையாடியிருக்கிறார்கள். நாங்கள் சில பெரிய டீம்களை வீழ்த்தியிருக்கிறோம். இது எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது. இந்தத் தொடரிலிருந்து பல பாடங்களைக் தெரிந்து கொண்டு தான் செல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

எங்களுக்கு இதுவொரு கடினமான நாள். நாங்கள் இதைவிட நன்றாக ஆடியிருக்க முடியும். நாங்கள் எந்த சூழலையும் எதிர்கொள்வதற்கு தயாராக தான் இருந்தோம். ஆனால், தென்னாப்பிரிக்க பௌலர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டுவிட்டார்கள். எங்களின் மிடில் ஆர்டரை மேலும் வலுப்படுத்த வேண்டும். அட்டாக்கிங்காக இன்னிங்ஸை கடைசிவரை கொண்டு செல்லக் கூடிய வகையில் எங்கள் மிடில் ஆர்டரை தயார் செய்யவேண்டும். இதனை சரியாக செய்தால் நாங்கள் இன்னும் சிறந்த அணியாக வளருவோம் என்று நினைப்பதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டி20 உலக கோப்பைதொடரில் குறைந்த ரன்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்த அணி என்ற மோசமான சாதனையை ஆப்கானிஸ்தான் அணி பெற்றுள்ளது. மேலும் வெற்றிகுறித்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்கா வீரர் ககிஸோ ரபாடா தெரிவித்திருப்பதாவது, இன்றைய போட்டியில் இப்படி நடக்கும் என்று நாங்களும் எதிர்பார்க்கவில்லை. எப்போதும் போல அதிரடியாக பந்துவீச வேண்டும் என்று தான் நினைத்தோம். பந்து சிறப்பாக ஸ்விங் ஆனது. அனைத்தும் நாங்கள் நினைத்த வாறு நடப்பதில் சந்தோஷம். இந்த அணி உலகக்கோப்பையை ஜெயிக்கும் என நம்புகிறோம். நம்பபாமல் போனால் ஆடுவதில் அர்த்தமே இல்லை தானே. சரியான இடங்களில் பந்துவீசியதற்கான பலனை இப்போது கிடைத்துள்ளதாகதெரிவித்தார்.

See also  இந்திய கிரிக்கெட் டீமின் தலைமை பயிற்சியாளர் ஆகிறார் கவுதம் காம்பீர்..!

தென் ஆப்பிரிக்காவின் வெற்றி பற்றி பேசிய கேப்டன் எய்டன் மார்க்ரம், உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தென் ஆப்பிரிக்க அணியை அழைத்துச்செல்லும் கேப்டனாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், ஒரு கேப்டனால் மட்டுமே அணியை இந்த இடத்துக்கு அழைத்து செல்ல முடியாது. வீரர்கள் மட்டும் என்று இல்லாமல் பயிற்சியாளர்கள் என பலரும் ஒரு அணியாக ஒன்றிணைந்து செயல்பட்டதால் நாங்கள் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

சமீபத்திய செய்திகள்