பல்லாவரத்தில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தியின் 33 வது நினனைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சென்னை அடுத்த பல்லாவரம் பேரூந்து நிலையம் அருகே செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினம் அனுசரிக்கபட்டது.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவரும், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ் செந்தில்குமார், பல்லாவரம் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தீனதயாளன் கலந்து கொண்டு மறைந்த ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர் இதனை தொடந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
இதில் பல்லாவரம் பகுதி தலைவர் வழக்கறிஞர் லோகநாதன் உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர். மாவட்ட நிர்வாகி மத்தின்கான் இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டினை செய்திருந்தார்